Saturday, November 1, 2008

சில கிறுக்கல்கள்

கருப்பு நிற கதிரவன் ஒளி வீசுகிறான் !என்னவள் கண்களில் ....
நீர் இருந்தால் தான் மீன் வாழ முடியும் அதுபோல் .....நீ இருந்தால் தான் நான் வாழமுடியும் ..
உண்மையோ !பொய்யோ !ரசிபேன் நீ பேசினால்

இன்னும் இனிக்கிறது,நீஎனக்குத் தந்த முதல் முத்தம்.
கடற்கரையின் ஈரக்காற்றோடு போரிட்டஉன் உஷ்ணக்காற்று,சிப்பி சேகரித்த கைகளோடுநீ இட்ட முத்து முத்தம்.
உன்னையும் என்னையும் சுற்றிஉலகமே வேடிக்கைபார்த்ததாய்எனக்குத் தோன்றநீயோ கடல் மணலில்உலகப்படம் வரைந்து கொண்டிருந்தாய்.
பூக்காரியைப் புறக்கணித்து,சுண்டல் காரனைத் துரத்தி,பிச்சைக்காரனுக்கு மட்டும் காசு போட்டதன் காரணம்எனக்கு விளங்கவில்லை.
பின்பு ஒரு நாள் சொன்னாய்.தானம் தரும் ஒவ்வொரு காசும்காதலைக் காப்பாற்றும் என்றுஉண்மை தானோ என்று யோசித்திருக்கிறேன்.
பள்ளிச்சிறுமி கண்டெடுத்தபவள மாலையாய்இதயத்தீவுக்குள் உன் முத்தத்தைஇறுக்கமாய்ப் பற்றியிருந்தேன்.
அதற்குப்பின்உதடுகள் வலிக்கும் வரை,உணர்வுகள் சலிக்கும் வரைபலமுறை முத்தமிட்டிருக்கிறாய்.
ஆனாலும்அந்த முதல் முத்தம் தந்த பள்ளம்நிரம்பிவிடவேயில்லை.நேற்றுநம் குழந்தை முதல் முதலாய்உதடு குவித்துஎன் கன்னதில் முத்தமிடும் வரை !!!

Wednesday, October 8, 2008

கனவுகள்

கண்களில் இன்னம் சில கனவுகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன
சூரியன் உதித்தால் மனமில்லாமல் அவற்றை களைத்துவிட்டேன்.....

Saturday, October 4, 2008

புதிதாய்

௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧

காத்திருப்பு

விடியலுக்காய் காத்திருக்கும்
குயிலை போல
மழைக்காக காத்திருக்கும்
வானம் பார்த்த பூமி போல
உன் வருகைக்காய் காத்திருக்கிறேன்

Friday, October 3, 2008

பொருள்

தேடி கிடைபதன்று என்ற தெரிந்த ஒரு பொருளை
தேடி பர்பதென்று மெய் தேடல் தொடங்கியதே....

மெய் தேடல் தொடங்கியதே.........

sudden thought

சிதறி கிடந்த என்னை

சரியாக சேர்த்து எடுத்து

என்னை எனக்கே திருப்பி கொடுத்தாள்

தேடி தேடி

சொற்பமாய் சுற்றிக்கொண்டு
காற்றினை பற்றிக்கொண்டு
அலைந்தேன் நானே

வானத்தின் நீலம் பார்த்து
என் எண்ணத்தின் வண்ணம் சேர்த்து
புதிதாய் ஒரு வண்ணம் தீட்டி பார்த்தேன் நானே

மழையின் முதல் துளியை பிடிக்க
மேகத்தின் அருகில் சென்று வந்தேன் நானே

இறகுகள் வேண்டும் எனக்கு
வானத்தின் நீளம் அளக்க
யாரிடம் நானே கேட்க

எனை கேட்டு உதித்திட வேண்டும் சூரியன்
நான் சொல்லி பாடிட வேண்டும் குயிலும் தான்

இந்த இயந்திர வாழ்க்கையின் நடுவே
புதிதை ஒரு புதையலை தேட
மனம் விரும்புதே





Tuesday, September 30, 2008

ஒரு நிமிடம்

கடிகாரத்தில் நேரம் இப்போது 2.42 அதிகாலை
எனக்கு திரியும் தூக்கத்தில் கூட உன் நினவு இன்னும் அகல வில்லை என்று
நினைவெல்லாம் உன்னை தேட வைத்தாய்
பகளிரவேல்லாம் யோசிக்க வைத்தாய்
நீ ஏன் என்னவள் ஆகவில்லை என்று
உன்னை நினைத்தால் உற்சாகம்
உன்னை நினைத்தால் சந்தோசம்
மனமெல்லாம் நிறைந்து வழிந்த அந்த ஒரு நிமிடம்
ஆனால் காணாமல் போனது என் நினைவு
உன்னோடு வாழ ஆசை
ஆனால் உன் நியாயபகதொடு வாழ வைத்தாய் ஏனடி
மரணத்தின் விளிம்பில் நின்றேன்
உயிரின் மறுபக்கம் உணர்தேன்
நினைவிழக்க நினைத்தாலும் முடியாமல் இருந்தேன்
குழப்பதின் குளத்திலே குடியேறி போனேன்
முடியாது என்பதையே அழகாக சொன்னை
வாழ்வின் தீவிக்குள் தனியாக சென்றேன்


இவற்றை எல்லாம் கடந்து தூங்க நினைத்து கடிகாரத்தை பார்த்தேன் நேரம் 2.43 அதிகாலை...


மனதோடு மழை காலம்


நீ பார்க்கும் பார்வை ஒரு பொழுதில் மறையாது ..
உன் விரலின் தீண்டல்.... என் உயிரை பிரியாது ...
உன் கூந்தல் பூ வசமேன் வாழ்வின் சுவாசம்
உயிர் கொண்ட பதுமையே ..உயிர் கொண்டு சென்றதேன்
உன்னை பிரிய வைத்தேன் ..
நிஜமெல்லாம் எனை மறக்க நினைவெல்லாம் எனை வெறுக்க
தனியாய் தான் நிற்க வைத்தாய்
பிரியாத வரம் ஒன்றை தான் கொடுத்தாய்
வரம் இன்று சாபமாய் போனதேன்
உன்னை மறக்க மனமில்லை நினைவிழக்க வழிஇல்லை
உன் நினைவை என் மனம் தாங்கும் போதெல்லாம் என் மனதோடு மழை காலம் ......

கோவம்

யார் மேல் என்று தெரிய வில்லை ஆனால் கோவம் கடுகடங்கத கோவம் கட்டு தீ போல் கோவம் கடலின் கொந்தலபில் தொலைந்து போன படகை போல என் கோவத்தில் காணாமல் போன எண்ணங்கள் பல...

சில நேரங்களில் சில எண்ணங்கள்.. அவற்றை பதிவு செய்ய வேண்டும்

தனிமையை தேடி


நான் தனிமையை தேடி அலையும் நேரம் இது... பொதுவாக மாற்றங்களும் ஏமாற்றங்களும் மாறி மாறி நிகழும் ஆனால் ஏமாற்றங்கல் மட்டுமே ஏன் நடகின்றன சில பேருக்கு

சிந்தித்து பார்த்தால் ஒன்றும் விளங்காது..
நான் தனிமையை தேடி செல்கின்றேன். நெடும் துறபயணம்... போகும் வழி எது வென்று தெரியாது ப்கௌம் திசை எது என்று தெரியாது.. சந்திக்கும் அதிசய மனிதர்களை பற்றிய.. என் பார்வை தன் இது..

தொடரும்... :)