சொற்பமாய் சுற்றிக்கொண்டு
காற்றினை பற்றிக்கொண்டு
அலைந்தேன் நானே
வானத்தின் நீலம் பார்த்து
என் எண்ணத்தின் வண்ணம் சேர்த்து
புதிதாய் ஒரு வண்ணம் தீட்டி பார்த்தேன் நானே
மழையின் முதல் துளியை பிடிக்க
மேகத்தின் அருகில் சென்று வந்தேன் நானே
இறகுகள் வேண்டும் எனக்கு
வானத்தின் நீளம் அளக்க
யாரிடம் நானே கேட்க
எனை கேட்டு உதித்திட வேண்டும் சூரியன்
நான் சொல்லி பாடிட வேண்டும் குயிலும் தான்
இந்த இயந்திர வாழ்க்கையின் நடுவே
புதிதை ஒரு புதையலை தேட
மனம் விரும்புதே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment