Saturday, November 1, 2008

சில கிறுக்கல்கள்

கருப்பு நிற கதிரவன் ஒளி வீசுகிறான் !என்னவள் கண்களில் ....
நீர் இருந்தால் தான் மீன் வாழ முடியும் அதுபோல் .....நீ இருந்தால் தான் நான் வாழமுடியும் ..
உண்மையோ !பொய்யோ !ரசிபேன் நீ பேசினால்

இன்னும் இனிக்கிறது,நீஎனக்குத் தந்த முதல் முத்தம்.
கடற்கரையின் ஈரக்காற்றோடு போரிட்டஉன் உஷ்ணக்காற்று,சிப்பி சேகரித்த கைகளோடுநீ இட்ட முத்து முத்தம்.
உன்னையும் என்னையும் சுற்றிஉலகமே வேடிக்கைபார்த்ததாய்எனக்குத் தோன்றநீயோ கடல் மணலில்உலகப்படம் வரைந்து கொண்டிருந்தாய்.
பூக்காரியைப் புறக்கணித்து,சுண்டல் காரனைத் துரத்தி,பிச்சைக்காரனுக்கு மட்டும் காசு போட்டதன் காரணம்எனக்கு விளங்கவில்லை.
பின்பு ஒரு நாள் சொன்னாய்.தானம் தரும் ஒவ்வொரு காசும்காதலைக் காப்பாற்றும் என்றுஉண்மை தானோ என்று யோசித்திருக்கிறேன்.
பள்ளிச்சிறுமி கண்டெடுத்தபவள மாலையாய்இதயத்தீவுக்குள் உன் முத்தத்தைஇறுக்கமாய்ப் பற்றியிருந்தேன்.
அதற்குப்பின்உதடுகள் வலிக்கும் வரை,உணர்வுகள் சலிக்கும் வரைபலமுறை முத்தமிட்டிருக்கிறாய்.
ஆனாலும்அந்த முதல் முத்தம் தந்த பள்ளம்நிரம்பிவிடவேயில்லை.நேற்றுநம் குழந்தை முதல் முதலாய்உதடு குவித்துஎன் கன்னதில் முத்தமிடும் வரை !!!

Wednesday, October 8, 2008

கனவுகள்

கண்களில் இன்னம் சில கனவுகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன
சூரியன் உதித்தால் மனமில்லாமல் அவற்றை களைத்துவிட்டேன்.....

Saturday, October 4, 2008

புதிதாய்

௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧௧

காத்திருப்பு

விடியலுக்காய் காத்திருக்கும்
குயிலை போல
மழைக்காக காத்திருக்கும்
வானம் பார்த்த பூமி போல
உன் வருகைக்காய் காத்திருக்கிறேன்

Friday, October 3, 2008

பொருள்

தேடி கிடைபதன்று என்ற தெரிந்த ஒரு பொருளை
தேடி பர்பதென்று மெய் தேடல் தொடங்கியதே....

மெய் தேடல் தொடங்கியதே.........

sudden thought

சிதறி கிடந்த என்னை

சரியாக சேர்த்து எடுத்து

என்னை எனக்கே திருப்பி கொடுத்தாள்

தேடி தேடி

சொற்பமாய் சுற்றிக்கொண்டு
காற்றினை பற்றிக்கொண்டு
அலைந்தேன் நானே

வானத்தின் நீலம் பார்த்து
என் எண்ணத்தின் வண்ணம் சேர்த்து
புதிதாய் ஒரு வண்ணம் தீட்டி பார்த்தேன் நானே

மழையின் முதல் துளியை பிடிக்க
மேகத்தின் அருகில் சென்று வந்தேன் நானே

இறகுகள் வேண்டும் எனக்கு
வானத்தின் நீளம் அளக்க
யாரிடம் நானே கேட்க

எனை கேட்டு உதித்திட வேண்டும் சூரியன்
நான் சொல்லி பாடிட வேண்டும் குயிலும் தான்

இந்த இயந்திர வாழ்க்கையின் நடுவே
புதிதை ஒரு புதையலை தேட
மனம் விரும்புதே